12th Tamil Quarterly Exam 2026 - Kanchipuram District Question Paper


12th Tamil Quarterly Exam 2026 - Kanchipuram District Question Paper

காஞ்சிபுரம் மாவட்டம் (Kanchipuram) பதிவு எண்: ____________

காலாண்டுப் பொதுத் தேர்வு - 2026

பன்னிரண்டாம் வகுப்பு — பொதுத்தமிழ்
நேரம் : 3.00 மணி மதிப்பெண்கள் : 90
குறிப்பு : i) அனைத்து வினாக்களுக்கும் விடை தருக.
ii) கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையினைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.
பகுதி - I மதிப்பெண்கள் : 14
1. ச.த. சற்குணரின் உரை ஏற்படுத்திய ஆர்வத்தினால் மயிலை சீனி. வேங்கடசாமி எழுதிய நூல்:
அ) பௌத்தமும் தமிழும்
ஆ) இஸ்லாமும் தமிழும்
இ) சமணமும் தமிழும்
ஈ) கிறித்துவமும் தமிழும்
2. "மின்னேர் தனியாழி வெங்கதிரொன்று ஏனையது / தன்னேர் இலாத தமிழ்" — இவ்வடிகளில் பயின்று வந்துள்ள தொடை நயங்களைத் தேர்க:
அ) அடிமோனை, அடி எதுகை
ஆ) சீர்மோனை, சீர் எதுகை
இ) அடி எதுகை, சீர்மோனை
ஈ) சீர் எதுகை, அடிமோனை
3. தண்டியலங்காரம் _______ இலக்கணத்தைக் கூறும் நூல்.
அ) எழுத்து
ஆ) சொல்
இ) பொருள்
ஈ) அணி
4. மயிலை சீனி. வேங்கடசாமி எழுதிய சொல்லாய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு:
அ) மத்தவிலாசம்
ஆ) தமிழ்நாட்டு வரலாறு
இ) அஞ்சிறைத் தும்பி
ஈ) திசைகள் வரலாறு
5. 'செம்பரிதி' எனத் தொடங்கும் பாடல் இடம்பெற்றுள்ள கவிதைத் தொகுப்பு:
அ) ஒளிப்பறவை
ஆ) நிலவுப்பூ
இ) சர்ப்பயாகம்
ஈ) சூரிய நிழல்
6. பிழையான தொடரைக் கண்டறிக:
அ) காளைகளைப் பூட்டி வயலை உழுதனர்.
ஆ) மலை மீது ஏறி கல்வெட்டுகளைக் கண்டறிந்தனர்.
இ) காளையில் பூத்த மல்லிகை மணம் வீசியது.
ஈ) நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கின.
7. சென்னை வெறும் நகரம் மட்டும் அல்ல அது நம்பிக்கை மையம் — காரணம்:
அ) நேரடி, மறைமுக வேலை வாய்ப்புகளின் களம்
ஆ) மென்பொருள், வன்பொருள், வாகன உற்பத்தியில் பங்கு
இ) மென்பொருள் ஏற்றுமதியில் முன்னிலை
ஈ) அனைத்தும் சரி
8. 'நரம்புகளுக்குள் வீணை மீட்டிக் கொண்டிருக்கிறது' — என்று அய்யப்ப மாதவன் குறிப்பிடுவது:
அ) சூரிய ஒளிக்கதிர்
ஆ) மழை மேகங்கள்
இ) மழைத்துளிகள்
ஈ) நீர்நிலைகள்
9. பொருத்துக:
அ) குரங்குகள் — 1. கன்றுகளைத் தவிர்த்தன
ஆ) விலங்குகள் — 2. மரங்களிலிருந்து வீழ்ந்தன
இ) பறவைகள் — 3. குளிரால் நடுங்கின
ஈ) பசுக்கள் — 4. மேய்ச்சலை மறந்தன
அ) 1, 3, 4, 2
ஆ) 3, 4, 2, 1
இ) 3, 2, 1, 4
ஈ) 2, 1, 3, 4
10. தமிழில் திணைப் பாகுபாடு _______ அடிப்படையில் பகுக்கப்பட்டுள்ளது.
அ) பொருட்குறிப்பு
ஆ) சொற்குறிப்பு
இ) தொடர் குறிப்பு
ஈ) எழுத்துக் குறிப்பு
11. 'யார்?', 'எது?' ஆகிய வினாச்சொற்கள் பயனிலையாய் அமைந்து உணர்த்தும் திணைகள் முறையே:
அ) அஃறிணை, உயர்திணை
ஆ) உயர்திணை, அஃறிணை
இ) விரவுத்திணை, அஃறிணை
ஈ) விரவுத்திணை, உயர்திணை
12. 'குடும்பம்' எனும் சொல் முதன்முதலில் இடம்பெற்றுள்ள நூல்:
அ) தொல்காப்பியம்
ஆ) திருக்குறள்
இ) குறுந்தொகை
ஈ) புறநானூறு
13. "இவற்றை வாயிலுக்கே சென்று இன்முகத்துடன் வரவேற்பாயாக" என்று ஜலாலுத்தீன் ரூமி குறிப்பிடுவது:
அ) வக்கிரம்
ஆ) அவமானம்
இ) வஞ்சனை
ஈ) இவை அனைத்தும்
14. "தந்தனன் தாதை தன்னைத் தடக்கையான் எடுத்துச் சார்வான்" — இத்தொடரில் 'தடக்கையான்' என்பதன் இலக்கணக்குறிப்பு:
அ) உரிச்சொல் தொடர்
ஆ) வினைத்தொகை
இ) உம்மைத்தொகை
ஈ) இடைச்சொல் தொடர்
பகுதி - II மதிப்பெண்கள் : 24
பிரிவு - அ (மதிப்பெண்கள்: 6)
எவையேனும் மூன்றனுக்கு விடை தருக. (3 × 2 = 6)
15. கவிஞர் சிற்பி எவற்றை வியந்து பாட தமிழின் துணை வேண்டும் என்கிறார்?
16. விடியல், வனப்பு — இரு சொற்களையும் ஒருங்கே அமைத்துத் தொடர் அமைக்க.
17. இராமன் சுக்ரீவனிடம் கூறிய செய்திகளை எழுதுக.
18. திருவளர்ச்செல்வன், திருவளர்செல்வன் — இவற்றில் சரியான தொடர் எது? விதி எழுதுக.
பிரிவு - ஆ (மதிப்பெண்கள்: 4)
எவையேனும் இரண்டனுக்கு விடை தருக. (2 × 2 = 4)
19. 'தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்' — குறிப்பு வரைக.
20. இந்தோ சாரசனிக் கட்டடக்கலை — குறிப்பு வரைக.
21. சங்க காலத்தில் பெண்கள் பெற்றிருந்த உரிமைகள் யாவை?
பிரிவு - இ (மதிப்பெண்கள்: 14)
எவையேனும் ஏழனுக்கு விடை தருக. (7 × 2 = 14)
22. மயங்கொலிச் சொற்களை ஒரே தொடரில் அமைத்து எழுதுக:
அ) விலை, விளை, விழை   (அல்லது)   ஆ) கலை, களை, கழை
23. நான்கு சொற்களைக் கொண்டு தொடர் அமைக்க: திரை, காண், கைதட்டல், மக்கள்
24. சொல்லுருபுகளைப் பிரித்தும் சேர்த்தும் இருவேறு தொடர்களை அமைக்க:
அ) தானே   |   ஆ) முன்
25. உவமைத் தொடர்களைச் சொற்றொடர்களில் அமைத்து எழுதுக:
அ) அச்சாணி இல்லாத தேர்போல   (அல்லது)   ஆ) எலியும் பூனையும் போல
26. வேறொரு பொருள் அமையுமாறு தொடர் அமைக்க: மாணவர்கள் வரிசையில் நின்று அறிவியல் கண்காட்சியைக் கண்டனர்.
27. வேற்றுமை உருபுகளைச் சேர்த்து முறையான தொடரமைக்க:
மாறன் பேச்சுத் திறன் யார் வெல்ல முடியும்?   (அல்லது)   காலை எழுந்து படித்து நமக்கு நன்மை தரும்.
28. கலைச்சொல்லாக்கம் தருக:   அ) MUSEUM    ஆ) FINE ARTS
29. இலக்கணக் குறிப்பு தருக:   அ) வெங்கதிர்   (அல்லது)   ஆ) வியர்வை வெள்ளம்
30. ஏதேனும் ஒன்றனுக்குப் பகுபத உறுப்பிலக்கணம் தருக:   அ) சாய்ப்பான்   (அல்லது)   ஆ) பொலிந்தான்
பகுதி - III மதிப்பெண்கள் : 24
பிரிவு - அ (மதிப்பெண்கள்: 8)
எவையேனும் இரண்டனுக்கு விடை தருக. (2 × 4 = 8)
31. "ஏங்கொலி நீர் ஞாலத்து இருளகற்றும்" — இடம் சுட்டிப் பொருள் விளக்கம் தருக.
32. வாடை காலத்தில் கோவலர்கள் எவ்வாறு பாதுகாப்பைத் தேடினர்?
33. எவற்றையெல்லாம் விட நன்றி உயர்ந்தது? — குறள் வழி விளக்குக.
34. குகனோடு ஐவராகி, வீடணனோடு எழுவரான நிகழ்வுகளைச் சுட்டுக.
பிரிவு - ஆ (மதிப்பெண்கள்: 8)
எவையேனும் இரண்டனுக்கு விடை தருக. (2 × 4 = 8)
35. மயிலை சீனி. வேங்கடசாமியின் வரலாற்று ஆய்வுகள் பற்றி விளக்குக.
36. சென்னை அறிவின் நகரம் என்பதைச் சான்றுகளுடன் விளக்குக.
37. தாயும் தந்தையும் பணிக்குச் செல்லும் இன்றைய சூழலில் குடும்பத்திற்கு நீங்கள் செய்யும் உதவிகள் யாவை?
38. மணந்தகம் — விளக்குக.
பிரிவு - இ (மதிப்பெண்கள்: 12)
எவையேனும் மூன்றனுக்கு விடை தருக. (3 × 4 = 12)
39. பொருள் வேற்றுமை அணியை விளக்குக.
(அல்லது)
"அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை / பண்பும் பயனும் அது" — இக்குறளில் பயின்று வரும் அணியை விளக்குக.
40. இலக்கிய நலம் பாராட்டுக:
"வெட்டி யடிக்குது மின்னல் - கடல் வீரத்திரை கொண்டு விண்ணை யிடிக்குது கொட்டி யிடிக்குது மேகம் - கூ கூவென்று விண்ணைக் குடையுது காற்று சட்டச்சட சட்டச்சட டட்டா - என்று தாளங்கள் கொட்டிக் கனைக்குது வானம் எட்டுத்திசையும் இடிய - மழை எங்ஙனம் வந்ததடா தம்பி வீரா!" — பாரதியார்
41. தமிழாக்கம் தருக:
1. The limits of my language are the limits of my world.
2. Knowledge of language is the doorway to wisdom.
3. A new language is a new life.
4. Learning is a treasure that will follow its owner everywhere.
42. வாகைத் திணையை விளக்குக.
43. குறிப்புகளில் மறைந்திருக்கும் தமிழறிஞர்களைக் கண்டுபிடி:
(தமிழ்ஒளி, கோதை, புதுமைப்பித்தன், அம்பை, ஜெயகாந்தன், மறைமலை அடிகள்)
1. தமிழறிஞர்; முதலிரு எழுத்துகளால் மறைக்கலாம்.
2. தாய்மொழி; ஈற்றிரு எழுத்துகள் வெளிச்சம் தரும்.
3. சிறுகதை ஆசிரியர்; முதல்பாதி நவீனம்.
4. முன்னெழுத்து அரசன்; பின்னெழுத்து தமிழ் மாதம்.
பகுதி - IV மதிப்பெண்கள் : 18
அனைத்து வினாக்களுக்கும் விடை தருக. (3 × 6 = 18)
44. அ) நெடுநல்வாடையில் நக்கீரர் காட்டும் மழைகால வருணனையை விளக்குக.
(அல்லது)
ஆ) தமிழின் சீரிளமைத் திறம் வியந்து கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் கூறுவனவற்றைத் தொகுத்து எழுதுக.
45. அ) செய்நன்றியறிதலே அறம் என்பதை திருக்குறள் வழி விளக்குக.
(அல்லது)
ஆ) பாரதியின் கடிதம் வாயிலாக நீங்கள் அறிந்து கொண்ட மொழிப்பற்று, சமூகப்பற்று ஆகியவற்றை விளக்குக.
46. அ) பொறுப்புணர்ச்சியின்றி இருந்த ஊரைத் தன் பொறுப்புணர்வால் மாற்றிய மருதனின் பண்பு நலத்தை விவரிக்க.
(அல்லது)
ஆ) 'உரிமை தாகம்' கதையில் வெளிப்படும் உறவின் மேன்மையை விளக்குக.
பகுதி - V (மனப்பாடப்பகுதி) மதிப்பெண்கள் : 6
அடிபிறழாமல் செய்யுள் வடிவில் எழுதுக. (4 + 2 = 6)
47. அ) "துன்பு உளது..." எனத் தொடங்கும் கம்பராமாயணப் பாடலை அடிமாறாமல் எழுதுக. (4 மதிப்பெண்கள்)
ஆ) "செய்யாமல்..." எனத் தொடங்கும் குறளை எழுதுக. (2 மதிப்பெண்கள்)

12th Std Study Materials

12th Study Materials

12th Tamil Study Materials

12th English Study Materials

12th French Study Materials

12th Maths Study Materials

12th Physics Study Materials

12th Chemistry Study Materials

12th Biology Study Materials

12th Botany Study Materials

12th Zoology Study Materials

12th Computer Science Study Materials

12th Accountancy Study Materials

12th Commerce Study Materials

12th Economics Study Materials

12th History Study Materials

12th Geography Study Materials

12th Statistics Study Materials

12th Business Maths Study Materials

12th Political Science Study Materials

12th Std Question Papers & Answer Keys

12th Quarterly Exam Question Papers and Answer Keys

12th Half Yearly Exam Question Papers and Answer Keys

12th Public Exam Question Papers and Answer Keys

12th First Revision Test Question Papers and Answer Keys

12th Second Revision Test Question Papers and Answer Keys

12th Third Revision Test Question Papers and Answer Keys

12th First Midterm Test Question Papers and Answer Keys

12th Second Midterm Test Question Papers and Answer Keys

12th Std Important Links

12th Syllabus

12th Lesson Plans

12th Monthly Test & Unit Test

Tamilnadu 12th Time Table | Plus Two Exam Time Table

Post a Comment